தமிழ்நாடு

tamil nadu

எல்லையில் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு!

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தமிழ்நாடு- கர்நாடக மாநிலங்களின் எல்லையான ஒசூர் அருகே கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன.

By

Published : Mar 21, 2020, 10:03 PM IST

Published : Mar 21, 2020, 10:03 PM IST

ஊரடங்கு உத்தரவால் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக அண்டை மாநிலங்களில் எல்லைகளை மூடி போக்குவரத்தை தடை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், தமிழ்நாடு-கர்நாடக மாநிலங்களின் எல்லையான ஜூஜூவாடியில் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.


ஒசூர் கோட்டாட்சியர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு-கர்நாடாக மாநில எல்லைகளான கக்கனூர், சம்பங்கிரி, அந்திவாடி உள்ளிட்ட 6 இடங்களில் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன

இதையும் படிங்க:மக்கள் ஊரடங்கு - வைரலாகும் வில்லிசைப்பாடல்!

ABOUT THE AUTHOR

...view details