திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இதயத்துல்லா மனைவி சிராஜ் நிஷா (47). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் அப்பாஸ் (27). இந்நிலையில் நேற்று (மே.11) சிராஜ் நிஷா, அப்பாஸ் இருவரும் பூக்களை கொள்முதல் செய்வதற்காக நாமக்கல் நோக்கி காரில் சென்றுள்ளனர்.
கரூர் அருகே வாகன விபத்தில் பெண் பலி
கரூர் : தென்னிலை பகுதியில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் படுகாயமடைந்தார்.
அப்போது கரூர் அருகே உள்ள எலக்காட்டுவலசு பகுதியை அவர்கள் கடந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சிராஜ் நிஷா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அப்பாஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இது குறித்து தென்னிலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : 'ஆசிரியர் போல சபாநாயகர் நடுநிலையுடன் நடக்க வேண்டும்' - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்