கரூர் புஞ்சை தோட்டக்குறிச்சி அருகே உள்ள மேல்ஒரத்தையில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக வேலாயுதம்பாளையம் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரூபன்குமார் (24) என்பவரது வீட்டைச் சோதனையிட்டதில், ஒரு கிலோ அளவுக்கு கஞ்சா பதுக்கிவைத்து, விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.