கரூர்: ஆண்டான்கோயில் கிழக்கு ஊராட்சி சரஸ்வதி நகரில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி 7 வயது பள்ளி சிறுவனை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் என்ற சலவைத் தொழிலாளியை கரூர் நகர போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக கரூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி நசீமா பானு நேற்று(மார்ச்29) தீர்ப்பளித்தார். குற்றவாளியான சண்முகவேலுக்கு, சிறுவனை ஏமாற்றி கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், போக்சோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் என மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.