தமிழ்நாடு

tamil nadu

முகிலனுக்கு ஆகஸ்ட் 6 வரை நீதிமன்றக் காவல்

By

Published : Jul 24, 2019, 8:57 AM IST

கரூர்: சூழலியல் ஆர்வலர் முகிலனை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகிலன்

குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண் ஒருவர் சூழலியல் ஆர்வலர் முகிலன் மீது அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, பாலியல் வல்லுறவு, பெண் வன்கொடுமை உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

தற்போது திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் அனுமதி கேட்டிருந்தனர். இதற்காக காவல் துறையினர் அவரை மீண்டும் கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, மூன்று மணி நேரம் மட்டுமே சிபிசிஐடி காவல் துறையினருக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், முகிலனை ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details