தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக ஆர்வலர்கள் மீது நிதி நிறுவன உரிமையாளர்கள் புகார்

கரூர்: பணம் கேட்டு மிரட்டும் சமூக ஆர்வலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிதி நிறுவன உரிமையாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு அளித்தனர்.

By

Published : Oct 22, 2019, 5:22 AM IST

கரூர் நிதி நிறுவன உரிமையாளர் பேட்டி

கரூரில் உள்ள தனியார் நிதி நிறுவன உரிமையாளர்கள் அனைவரும் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் மனு அளித்தனர்.

கரூர் நிதி நிறுவன உரிமையாளர் பேட்டி

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், கரூரில் நிதி நிறுவனங்களை நடத்தி வரும் தாங்கள் பெரும்பாலான குடும்பங்களுக்கு கடன் கொடுத்துள்ளதாகவும், தங்கள் மீது கந்து வட்டி புகார் கொடுக்குமாறு சமூக ஆர்வலர்களான தனபால், தென்னரசு, ரகுமான், சண்முகம் ஆகியோர் பொதுமக்களை வலியுறுத்துவாதகவும் தெரிவித்தனர்.

மேலும், கொடுத்த புகார்களை வாபஸ் பெற வேண்டுமென்றால், தாங்கள் மூன்று லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை சமூக ஆர்வலர்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படியுங்க:

’அம்முக்குட்டி’யை முகாமில் சேர்ப்பது குறித்து வனத் துறை பதிலளிக்க உத்தரவு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details