தமிழ்நாடு

tamil nadu

'உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா?' - ஜான் பாண்டியன் கேள்வி

By

Published : Sep 19, 2019, 4:43 PM IST

கரூர்: உதயநிதி ஸ்டாலினால் மண்சட்டி சுமக்க முடியுமா என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

jhon pandiyan

கரூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்தி மொழிக் கற்பதை வரவேற்க வேண்டும். அரசியல் பணி நிமித்தமாக டெல்லி சென்றால் மொழிபெயர்ப்பாளர்களையும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழலுள்ளது.

ஆதலால் இந்தி மொழியை கற்பதில் தவறில்லை. அதேசமயம், இந்தி திணிப்பு யாராலும் ஏற்கப்படாது. மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகள் தொடர்ந்து எதிர்த்து வரும் மனப் போக்கை கைவிட வேண்டும்" எனக் கூறினார்.

ஜான் பாண்டியன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் இளைஞரணிச் செயலாளராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினால் ஒரு மணி நேரம் தூர்வாரும் பணியில் ஈடுபட முடியுமா என்றும், அவரால் தலையில் மண்சட்டி சுமக்க முடியுமா என்றும் கேள்வியெழுப்பினார்.

இதையும் படிக்கலாமே: " தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கமல்ஹாசன்" - கடுமையாக விமர்சித்த ஜான் பாண்டியன்

ABOUT THE AUTHOR

...view details