கரோனா தொற்றின் காரணமாக திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக் கல்லூரியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது இரண்டு வயது குழந்தை உள்பட 25 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.