தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 25, 2020, 11:56 AM IST

ETV Bharat / state

கரோனா தொற்று: குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள்!

கரூர்: கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு வயது குழந்தை உள்பட 25 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரோனா தொற்று: குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள்
கரோனா தொற்று: குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகள்

கரோனா தொற்றின் காரணமாக திண்டுக்கல், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவமனைக் கல்லூரியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தற்போது இரண்டு வயது குழந்தை உள்பட 25 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்து வீடு திரும்பும் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரும், கரோனா தடுப்பு உபகரணங்கள், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி, கைத்தட்டி உற்சாகப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details