தமிழ்நாடு அரசின் 110 விதியின் கீழ் நேற்று (பிப். 25) சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59லிருந்து 60ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்மூலம் படித்துவிட்டு வேலையில்லாமல் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு மன சுமையைத்தான் அதிகப்படுத்தும். ஏற்கனவே உள்ள அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, தடியடி நடத்தி அவர்களை தாக்கிய இந்த அரசு தற்போது யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள் கடந்த 4 நாள்களாக சாலையில் படுத்துறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அரசு இதுவரை அதற்கு செவி சாய்க்கவில்லை. அரசு ஊழியர்களை அலட்சியப்படுத்தும் அரசுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!