தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 22, 2019, 10:50 PM IST

ETV Bharat / state

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணி தீவிரம்!

கரூர்: குளித்தலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் ரோப்கார் அமைக்கும் பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.

ayyarmalai-rathinagreeswarar-

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக வருகின்றனர். மலையின் மீது அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்வதற்கு 1017 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் முதியவர்கள் மற்றும் சிறுவர்களின் நலனுக்காக ரோப்கார் வசதி அமைக்க 2011ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை மிக மந்தமாக நடந்து வரும் இப்பணியினை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி இன்று ஆய்வு செய்தார். பின்னர் ரோப்கார் அமைக்கும் பணியனை விரைவாக முடிக்கக்கோரி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில்

ABOUT THE AUTHOR

...view details