கரோனா தொற்றுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை முடிந்து 5 நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெரும் தொற்று காரணமாக, பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அந்தவகையில், கரூர் மாவட்டத்தின் அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்ட நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் என பூரண குணமடைந்த ஐந்து பேர் இன்று மதியம் 3 மணிக்கு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.