கன்னியாகுமரி: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த அரசு பள்ளியின் முன்பக்கம் நிற்கும் வேப்பமரத்தில் நேற்று (ஜூன் 1) காகம் ஒன்று இரை தேடியபடி அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. இரை தேடி வந்த அந்த காகம் வேப்பமரத்தில் அமர்ந்தபோது, அந்த மரத்தில் பின்னி பிணைந்து கிடந்த நூலில் அதன் கால்கள் சிக்கின.
காலில் நூல் சிக்கியதைக்கண்டு கொள்ளாத, அந்த காகம் வேறு பகுதிக்கு இரை தேட பறந்து செல்ல முயன்றபோது, காலில் சிக்கியிருந்த நூலால் நிலை தடுமாறி தலைகீழாக தொங்கியது. இதனால், பறக்க முடியாமல் உயிருக்குப் போராடியது. காகத்தின் இந்த பரிதாப நிலையை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில், இதைப் பார்த்த அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பதிவிட்ட நபரிடம் விவரத்தைக் கேட்டறிந்து அந்த பள்ளிக்குச் சென்றனர். அதுவரை அந்த காகம் தலைகீழாக தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.