கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், கோவில்கள், வணிக வளாகங்கள் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் குமரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடுகள் நடத்தி வந்தனர். தேவாலயங்களில் அதிக பொதுமக்கள் கூடியதால் கரோனா பீதி ஏற்பட்டது. இதனால் குமரி மாவட்டத்தின் 4 மறை மாவட்டங்களிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் நாளைமுதல் வழிபாடுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.