தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 10, 2020, 9:21 AM IST

ETV Bharat / state

சொந்த செலவில் அரசு அலுவலக பணிகளுக்கு கணிப்பொறி வழங்கிய வசந்தகுமார் எம்.பி.

கன்னியாகுமரி: மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அகஸ்தீஸ்வரம் அரசு சுகாதார நிலையத்திற்கும், தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கும் தனது சொந்த செலவிலிருந்து கணிப்பொறி, நகலெடுக்கும் இயந்திரம் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினார்.

vasanthakumar mp gifting computer in kanyakumari
vasanthakumar mp gifting computer in kanyakumari

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராக ஹெச். வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு குமரி மாவட்டத்தின் கோயில்களுக்கும், அரசு நிறுவனங்களுக்கும் தனது சொந்த செலவிலிருந்து தேவையான பொருள்களை வழங்கிவருகிறார். அதுபோல் ஏழைகளுக்கும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவருகிறார்.

இவ்வேளையில் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தென்தாமரைகுளம் காவல் நிலையம் ஆகியவற்றிற்குத் தேவையான கணிப்பொறி, நகலெடுக்கும் இயந்திரங்களை தனது சொந்த பணத்திலிருந்து வழங்கினார்.

அன்பளிப்பு வழங்கிய மக்களவை உறுப்பினர்

அப்போது தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகர், அரசு மருத்துவர் அனிஷா ஆகியோர் அலுவலக தேவைக்காக உதவிய கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமாருக்கு தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகிகள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் உடனிருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details