தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதில், "மூன்றாயிரத்து 537 இடங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தப் பதவியிடங்களுக்கு மொத்தம் ஒன்பதாயிரத்து 807 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையில் 135 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
903 பேர் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 1007 பணியிடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 28 பேரும், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கு 978 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக ஏழு ஒன்றியங்களுக்கு நடத்தப்படுகின்றது.