தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 8:19 AM IST

ETV Bharat / state

மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு!

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினர் கண்டெடுத்தனர்.

நாகர்கோவில் ஆண் சடலம் மீட்பு கன்னியாகுமரி ஆண் சடலம் மீட்பு நாகர்கோவில் கொலை வழக்கு குப்பை கிடங்கில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு Male Dead Body Recoverd In Nagarcoil Male Dead Body Recoverd In Kanniyakumari Nagarcoil Murder Case Unidentified male corpse recovery in the garbage warehouse
Male Dead Body Recoverd In Nagarcoil

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள வட்டவிளை ராயல் கார்டன் பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. அங்கு மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். அப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தலையில் கற்களைக் கொண்டு தாக்கி முகம் சிதைந்த நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கண்டெடுத்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இறந்தவரின் சட்டை கிழித்து அருகே வீசப்பட்ட நிலையில், பெண் கைக்குட்டை, இருசக்கர வாகன சாவி உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

காவல் துறையினர் மீட்கும் ஆண் சடலம்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

கழிவுநீர் கால்வாயில் பெண் சடலம் மீட்பு - போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details