தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 2, 2019, 7:46 AM IST

ETV Bharat / state

சம்பள நிலுவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்!

கன்னியாகுமரி : பி.எஸ்.என்.எல்.Fல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மூன்று மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி நாகர்கோவில் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

kk

கன்னியாகுமரி மாவட்டம் பி.எஸ்.என்.எல்.இல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிப்படைந்த ஒப்பந்த ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுயம்புலிங்கம் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பள நிலுவையை உடனடியாக வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details