தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வியாபார நோக்கில் செயல்படும் அரசு மருத்துவர்!

கன்னியாகுமரி: சிங்களேயப்புரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர் சதீஷ், வியாபார நோக்கில் செயல்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரிடம் சுகாதார அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By

Published : Aug 11, 2019, 7:29 PM IST

வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவர் மீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கன்புதூர் அருகே சிங்களேயபுரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு வேலை செய்யும் அரசு மருத்துவர் சதீஷ், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேவையான மருந்துகள் இருந்தும் அதனை நோயாளிகளுக்கு வழங்காமல், தான் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்று வியாபார நோக்கத்தில் சிகிச்சை அளித்துள்ளார்.

வியாபார நோக்கில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவர் மீது புகார்

இதனால் மருத்துவர் சதீஷ் மீது நாகர்கோவில் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் மதுசூதனிடம் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details