கன்னியாகுமரி மீன் தொழிலாளர் யூனியன் மீனவர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மீன் தொழிலாளர் யூனியன் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கன்னியாகுமரி: உலக மீனவர் தினத்தை முன்னிட்டு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 'மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து தருவோம் என பிரதமர் வாக்குறுதி கொடுத்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தனி அமைச்சகம் ஏற்படுத்தவில்லை. மீனவ மக்களை பட்டியல் இனத்தில் சேர்ப்போம் என 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நாட்டு படகு மீனவர்களுக்கு வாக்கி டாக்கி