கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே புத்தேரி குளக்கரையின் கீழ்ப்பகுதியில் பராசக்தி கோயில் உள்ளது. இங்குள்ள பராசக்தி கோயிலில் புலி ஒன்று சுவர் தாண்டிக் குதித்து, கோயில் வளாகத்தினுள் ஓடியதைப் பார்த்ததாக அந்தக் கோயில் பூசாரி கூறினார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும், ஆள் நடமாட்டம் இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கும் பகுதியிலும், புலி பதுங்கி இருக்கிறதா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.