கன்னியாகுமரி: நாகர்கோவில் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மாந்திரிகம் பார்ப்பதற்காக நாகர்கோவில் வடசேரி கலுங்கடி பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி மணிகண்டன்(வயது 35) என்பவரை அணுகியுள்ளார்.
மந்திரவாதி மணிகண்டன், கூலித் தொழிலாளி வீட்டில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் தொடர்ந்து பலமுறை மணிகண்டன் சம்பந்தப்பட்டவர் தொழிலாளி வீட்டிக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அதே போன்று மணிகண்டன் சென்ற போது, வீட்டில் 13 வயதுடைய மகள் மட்டும் தனியாக இருந்துள்ளார்.