தமிழ்நாடு

tamil nadu

செங்கல்பட்டில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை - குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

By

Published : Sep 6, 2019, 12:58 PM IST

காஞ்சிபுரம்: செங்கல்பட்டு அருகே 30 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

young lady hacked-to-death

செங்கல்பட்டு அடுத்த காவித்தண்டலம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயவேல்-கோமதி தம்பதி. இவர்கள் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற கோமதி மாலை தனியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தாமதமாக அவரது கணவர் ஜெயவேலு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கோமதி வீட்டில் இல்லாததால் பல இடங்களிலும் தேடியுள்ளார்.

இந்த நிலையில், அங்குள்ள ஏரிக்கரை கால்வாய்ப் புதரில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, ஜெயவேலு சென்று பார்த்தபோது அவரது மனைவி கோமதி கழுத்துப்பகுதியில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இளம் பெண் கழுத்தறுத்து கொலை

கோமதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இந்த கொலை நடந்துள்ளதால், நகை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details