காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த இடையாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் செல்வகுமாரும்(17), அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் யுகேஷ் (12) ஆகியோர் இன்று பள்ளி விடுமுறை என்பதனால் பாலாற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அதிகப்படியான ஆழத்தில் குளித்ததால், நீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அறிந்த அப்பகுதி காவல் நிலைய அலுவலர்களும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து ஒரு மாணவரின் சடலத்தை மீட்டனர். மற்றொருவர் சடலத்தைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
கிடைத்த சடலத்தினை உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் காவல் துறையினர் இருவரும் வழக்குப்பதிவு செய்து, ஆற்றிற்குக் குளிக்கச் சென்றார்களா அல்லது மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.