காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குகன், ஞான பிரியா. இருவரும் கடந்த மூன்று வருடங்கள் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஞான பிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏப்ரல் 7ஆம் தேதி, குகன், ஞான பிரியா ஆகிய இருவரும் பெரியார் திடலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, அதை சட்டப்படி பதிவு செய்தனர். இந்தநிலையில், ஞான பிரியாவின் பெற்றோர் மகளை காணவில்லை என, சுங்கு வார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.