தமிழ்நாடு

tamil nadu

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு ரவுடி கொலை மிரட்டல்!

காஞ்சிபுரம்: பிரபல ரவுடி தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் பாதுகாப்பு கேட்டுக் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By

Published : Apr 24, 2021, 5:49 PM IST

Published : Apr 24, 2021, 5:49 PM IST

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் குகன், ஞான பிரியா. இருவரும் கடந்த மூன்று வருடங்கள் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஞான பிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏப்ரல் 7ஆம் தேதி, குகன், ஞான பிரியா ஆகிய இருவரும் பெரியார் திடலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு, அதை சட்டப்படி பதிவு செய்தனர். இந்தநிலையில், ஞான பிரியாவின் பெற்றோர் மகளை காணவில்லை என, சுங்கு வார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்

இதனிடையே பிரபல ரவுடி குணா என்பவர் இளம் ஜோடியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். தற்போது ஞான பிரியா, இது தொடர்பாக காணொலியை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது கணவர், அவரது குடும்பத்தினரின் உயிரிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஞான பிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:விவசாயிகளின் தலைவருக்கு கொலை மிரட்டல்... போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details