MGR Memorial Day: பாரத ரத்னா எம்ஜிஆரின் 34ஆவது நினைவுநாள் தமிழ்நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டம் முதல் கிளைக்கழகம் வரை எம்ஜிஆரின் படத்திற்கும், உருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வி. சோமசுந்தரம் தலைமையில் முதலில் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் ஒன்றியச் செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள்.