தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2021, 9:14 AM IST

ETV Bharat / state

தமாகா மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கைது: 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

காஞ்சிபுரம்: கஞ்சா கடத்திய தமாகா மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளரை கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர்.

த.மா.கா மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கைது
த.மா.கா மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசின் மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளராக உள்ளார்.

ஏற்கனவே இவர் மீது பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் மணல் கடத்தல் தொடர்பாக எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. எனவே இவரைத் தீவிரமாக காவல் துறையினர் கண்காணித்துவந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சங்கர் சில நபர்களுடன் சுற்றித் திரிவதாக சிவகாஞ்சி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான காவலர்கள், சங்கரின் வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சங்கரை காவல் துறையினர் கைதுசெய்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல்செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கஞ்சா செடிகளைக் கண்டறிய ட்ரோன் கேமரா

ABOUT THE AUTHOR

...view details