காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி 2018ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் திடீரென்று சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர்.
இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உட்பட 14 பேர் இன்று உளுந்தூர்பேட்டை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகநாதன் முன்னிலையில் ஆஜராயினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த விசாரணை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.