கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, அண்டை மாநிலங்களை போல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரமும், மிகவும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5ஆயிரமும் வழங்க வேண்டும்.
தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 விழுக்காடு வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை முழுமையாக அறிவித்து நிரப்பிடவில்லை.