கள்ளக்குறிச்சி மாவட்டம் மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் இன்று (மார்ச் 2) காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது எவ்வித ஆவணங்களுமின்றி எடுத்து வரப்பட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்து கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் ஒப்படைத்தனர்.
மாடூர் சுங்கச்சாவடியில் பறக்கும் படை அலுவலர்கள் 4 லட்சம் ரூபாய் பறிமுதல்
கள்ளக்குறிச்சி: மாடூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வியாபாரி ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமாக பறிமுதல் செய்துள்ளனர்
election-flying-squad-seized-rupees-4-lakhs-near-kallakkurichi
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், இவர் மீன்குஞ்சு வியாபாரி என்பதும், காஞ்சிபுரம் பகுதி கிராம ஏரியில் ஏலம் எடுக்க சென்று மீண்டும் வீடு திரும்ப வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் வீட்டில் கொள்ளை!