கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில், எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்குத் திறப்பு விழாவை மட்டுமே முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தபின் மின்வெட்டு அதிகரித்துள்ளது. விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்வெட்டு வரும் என நாங்கள் பலமுறை எச்சரித்தும் திமுக அரசு சரியான முறையில் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தற்பொழுது மின் வெட்டு காரணமாக விவசாயிகள் வேளாண் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை. தொழிற்சாலைகள் சரியாகச் செயல்படாததால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டினார். கடந்த பத்தாண்டு காலமாக வெளிநாடுகள் மூலமாக கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு வருவதற்காக ஸ்டாலின் வெளிநாடு சென்றார்.