தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய காவலர் குடியிருப்பு கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட காவலர் குடியிருப்பை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

By

Published : Jan 23, 2021, 4:10 PM IST

புதிய காவலர் குடியிருப்பு கட்டிடம் : காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
புதிய காவலர் குடியிருப்பு கட்டிடம் : காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி அருகே கோட்டைமேட்டில் 3 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 காவலர் குடியிருப்பு கட்டடத்தை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்வில் கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். இந்நிகழ்வில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி, உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர் உட்பட 22 காவலர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் சார்பில் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா

ABOUT THE AUTHOR

...view details