கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கல்வராயன் மலைப் பகுதியில் நேற்று (டிச.16) முழுவதும் பெய்த கனமழையால் மணிமுத்தாறு அணைக்கு தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையின் பாதுகாப்பு கருதி புதிய அணைக்கட்டின் வழியாக வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மணிமுத்தாற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கிரண்குராலா அணையை நேரில் ஆய்வு செய்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.