ஈரோடு: கொடுமுடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது இரு குழந்தைகளுடன் விஷ மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த பெண்ணின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடுமுடி அருகே வீரப்பண்ணகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு சங்கர். விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதியினருக்கு நிகின் சங்கர், சுதர்சனா என இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு (ஜூலை 6) கணவன், மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் நள்ளிரவு சுமார் 2 மணியளவில் சசிகலா, அவரது மகன், மகள் ஆகியோர் விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபு சங்கர், மூவரையும் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.