தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 29, 2020, 12:14 PM IST

ETV Bharat / state

புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகம் முற்றுகை!

ஈரோடு: சாலையோர கடைகள் முன் நகராட்சி வாகனங்கள் நிறுத்தப்பட்டதை கண்டித்து புன்செய் புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

சாலையோர கடை வியாபாரிகள்
சாலையோர கடை வியாபாரிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி சத்திரம் வீதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 14 சாலையோர கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்றுவதாகவும், இது குறித்து வட்டாட்சியர் கணேசன் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நிலையில் நேற்று (ஜூலை 28) இரவு சாலையோர கடைகள் முன் நகராட்சி வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் சாலையோர கடை வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சாலையோர கடை முன் நிறுத்தியிருந்த வாகனத்தை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து, சாலையோர கடை வியாபாரிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க:காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details