ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கச்சேரி வீதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில், பழங்கால நாணயங்களின் கண்காட்சி நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. மேலும், மிகவும் பழமைவாய்ந்த கேமராக்கள், ரேடியோ, டைப்ரைட்டிங் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழமை வாய்ந்த பொருள்களும் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.