தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 1, 2019, 3:06 PM IST

ETV Bharat / state

அன்னை இன்ப்ரா நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை!

ஈரோடு: பெருந்துறை சாலையில் உள்ள அன்னை இன்ப்ரா டெவலப்பர் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

income tax raid

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிமெண்ட் குழாய் தயாரிப்பு, கட்டுமானம் என பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.

வருமானவரித் துறையினர் சோதனை

இந்நிலையில், அசோக்குமாருக்குச் சொந்தமான இந்நிறுவனத்தில் கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர். பெருந்துறை சாலையில் உள்ள அலுவலகம், பெருந்துறை சிப்காட்டில் உள்ள நிறுவனங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

அசோக்குமார் 450 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடி தொடர்பாக கடந்த மாதம் விசாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details