ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த தலமலையில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் கோவை, ஈரோடு போன்ற பகுதிகளிலிருந்து பலர், தலமலைக்கு வந்து தங்குவார்கள். நாளடையில் இங்கு ஆண்கள் மட்டும் வந்து தங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தற்போது எல்லை மீறிய அவர்கள் பெண்களும் சேர்ந்துகொண்ட கும்மாளம் போடத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த ஜோதீஸ்வரமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில், கிடா விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் ஈரோட்டைச் சேர்ந்த சுமன் (36) என்பவர், தனது நண்பர்கள் வினோத், கார்த்திகேயன், ஹரீஸ், ஜெகதீஸ், சிவா, நந்து ஆகியோருடன் கலந்துகொண்டார். இதில் கேரளாவைச் சேர்ந்த ஸ்டேனியா, கோவை ஒண்டிபுதூரைச் சேர்ந்த பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.