ஈரோடு:சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. அபாயகரமான வளைவுகளுடன் கூடிய இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் அடிக்கடி கவிழ்ந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து இயந்திர உதிரிபாகங்கள் ஏற்றிய கண்டெய்னர் லாரி கோவை செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தது. லாரி திம்பம் மலைப்பாதை 6ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.