தமிழ்நாடு

tamil nadu

கரோனா தடுப்பு: பவானிசாகர் அணை பூங்கா மூடல்!

By

Published : Jan 1, 2021, 2:41 PM IST

ஈரோடு: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டது.

பவானிசாகர் அணைப்பூங்கா மூடல்  பவானிசாகர் அணை  சத்தியமங்கலம் பவானிசாகர் அணைப்பூங்கா  Bhavani Sagar Dam  Satyamangalam Bhavanisagar Dam Park  மாவட்ட ஆட்சியர் கதிரவன்  Collector Kathiravan
Closure of Bhavani Sagar Dam Park

தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பவானிசாகர் அணை பூங்கா நேற்றிரவு (டிச. 31) முதல் நாளை இரவு மூட மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார்.

இதனால், நேற்றிரவு (டிச. 31) 10 மணி முதல் பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டது. இதனை பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக அணை பூங்காவின் முன்புள்ள நுழைவு வாயிலில் பூங்கா மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டடுள்ளது. இந்நிலையில், இன்று காலை அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டம் ஊட்டியில் தடை விதிப்பு: மீறினால் கடும் நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details