தமிழ்நாடு

tamil nadu

கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்திய சிறுவர்கள்!

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சிறுவர்கள் சிலர் கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தி அசத்தியுள்ளனர்.

By

Published : Apr 3, 2020, 4:18 PM IST

Published : Apr 3, 2020, 4:18 PM IST

கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்திய சிறுவர்கள்!
கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்திய சிறுவர்கள்!

கரோனா வைரஸ் காரணமாக வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த, நான்கு சிறுவர்கள் நாடகம் மூலம் நடித்துக் காட்டியுள்ளனர்.

அதில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தலை வலியுறுத்தி, அரசு வெளியிட்ட அறிவிப்பை கேட்காமல் வெளியே நடமாடினால் கரோனா தொற்று ஏற்படுவது போலவும், அரசின் உத்தரவை மதித்து விட்டில் இருந்தால், கரோனா வைரஸ் தொற்று பரவாது என்பதைத் தத்ரூபமாக நடித்துக் காட்டியுள்ளனர். சிறுவர், சிறுமியர் சேர்ந்து, கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்தியுள்ளது, அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

கரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்திய சிறுவர்கள்!

இதையும் படிங்க:சத்தியமங்கலம், இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா..! குவா...!

ABOUT THE AUTHOR

...view details