தமிழ்நாடு

tamil nadu

சத்தியமங்கலம், இளம்பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா..! குவா...!

By

Published : Feb 15, 2020, 9:11 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

baby
baby

சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்புபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (27). கூலித்தொழிலாளியான இவருக்கு தரண்யா (19) என்ற மனைவி உள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தரண்யாவிற்கு நேற்று (பிப்.14) பிரவச வலி ஏற்பட்டது.

இதையடுத்து செந்தில்குமார் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், தரண்யாவை ஏற்றிகொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தது.

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் பாரதி, ஒட்டுநர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது தரண்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்ததால் வலி தாங்காமல் துடித்ததார். இதையடுத்து வாகனத்தை அங்கேயே ஓட்டுநர் நிறுத்தினார்.

உடனடியாக மருத்துவ உதவியாளர் பாரதி, தரண்யாவிற்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து தரண்யாவிற்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கண்ணாம்பூச்சி விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

ABOUT THE AUTHOR

...view details