தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 4:08 PM IST

ETV Bharat / state

நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு: பவானிசாகர் எம்எல்ஏ நிதியுதவி!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன், தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு
நீரில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மாதம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கநாயக்கன்பாளையம் காலனியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் மௌலீஸ்வரன் (13), ரெங்கநாதன் மகன் திலீப்குமார் (12), முருகன் மகன் ஜீவானந்தன் (14) ஆகிய மூவரும் அரசுப்பள்ளியில் படித்து வந்தனர்.

சில தினங்களாக அப்பகுதியில் பெய்துவந்த கனமழையின் காரணமாக கரளாமணி குட்டையில் நீர் நிரம்பியிருந்தது. இதனால், மாணவர்கள் மூவரும் கரளாமணி குட்டைக்கு குளிக்கச் சென்றபோது மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மாணவர்களின் உடல்களை மீட்டு, சத்தியமங்கலம் அரசு பொதுமருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஈஸ்வரன் உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினர்.

இதையும் படிங்க: நீர்த்தேக்கத்தில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details