திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலை முத்தமிழ் நகரில் வசித்துவந்தவர் சமந்தா என்னும் திருநங்கை. அவர் வீட்டின் முன்பாக சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு சமந்தாவின் வீட்டிலிருந்த நாய்கள் இடையூறாக இருந்ததால், அவற்றை மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் விஷம் வைத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதனால் சமந்தா காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் அகில இந்திய மக்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக திருநங்கைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள், "சமந்தா மீது பொய் வழக்கு போட்டு காவல் துறையினர் மிரட்டுகின்றனர்.