தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 5, 2021, 7:27 PM IST

ETV Bharat / state

மனைவி பிரிந்த விரக்தி... ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகன்!

வேடச்சந்தூர் அருகே மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகனையும் அவரது நண்பர்களையும் அக்கம்பக்கத்தினர் சுற்றிவளைத்துப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Dindugal
மருமகன்

திண்டுக்கல்: வேடச்சந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் உமாபதி (55). இவரின் மகளுக்கும் சென்னை முகப்பேரில் வசிக்கும் சத்தியநாராயணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில், சத்தியநாராயணனின் மனைவி சென்னையில் உள்ள அவரது சித்தியின் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகன்

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்திலிருந்த சத்தியநாராயணன், தனது நண்பர்கள் கலையரசன் (35), கார்த்திகேயன் (33) ஆகியோருடன் காக்காதோப்பில் உள்ள தனது மாமானார் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் கதவை பலமாகத் தட்டியதால், சுதாரித்துக்கொண்ட உமாபதி, சத்தம் போட்டுள்ளார்.

தொடர்ந்து அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மூவருக்கும் தர்ம அடி கொடுத்து, விவசாயத் தோட்டத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேடச்சந்தூர் காவல் துறையினர், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:மயக்க மருந்து கொடுத்து மருமகளை வன்புணர்வு செய்த மாமனார் மீது போலீசில் புகார்

ABOUT THE AUTHOR

...view details