தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2020, 8:55 PM IST

ETV Bharat / state

கல் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திண்டுக்கல்: கல்குவாரி அமைத்துக்கொள்ள அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல்
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குள்பட்ட செங்குறிச்சி கிராமப்பகுதியில் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு கல்குவாரி அமைத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றியதோடு பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கல் குவாரி அமைக்க உத்தரவிட்டதை ரத்து செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் இன்று நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details