கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே குருசரடி பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி (55) என்பவர் ஊரடங்கை பயன்படுத்தி தனது நண்பர்கள், உறவினர்களுக்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் உத்தரவின்பேரில், சார்பு ஆய்வாளர் ரமேஷ் ராஜா தலைமையில் காவலர்கள் சிலர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது, துரைப்பாண்டி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
அவரிடமிருந்து சுமார் 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து அந்நபரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க:காணாமல் போன 2 சிறுமிகள், மரத்தில் பிணமாகத் தொங்கிய நிலையில் மீட்பு!