தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பூம்பாறை கிராமத்தில் நேற்று மாலை (செப். 04) முதல் கனமழை பெய்யத் தொடங்கியது.
கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கடைகள் சேதம்!
திண்டுக்கல்: குழந்தை வேலப்பர் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் சேதம் அடைந்துள்ளன.
kulandhaivelappar temple
கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்தக் கனமழையால் பழனி தண்டாயுதபாணி உபகோயிலான புகழ் பெற்ற குழந்தை வேலப்பர் முருகன் கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அக்கோயிலை ஒட்டியிருந்த 10-க்கும் மேற்பட்ட தகர கடைகள் பலத்த சேதமடைந்தன. இதையடுத்து, வியாபாரிகள் கன மழையையும் பொருட்படுத்தாது கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு!