கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டி பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் காவல் ஆய்வாளர் ராஜமுரளி தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் கனகராஜ்(35) என்பவர் மறைவான ஒரு இடத்தில் வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
மது விற்றவரை கைது செய்த காவல் துறையினர் இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த 1000 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் கடித்து மூதாட்டி உயிரிழப்பு!