திண்டுக்கல்: நத்தம் வனச்சரகம் கோட்டையூர் வனப்பகுதியில் விஜயலட்சுமி (31) என்பவர் வனக்காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது பெற்றோர் ராம்நாடு அருகே சாயல்குடி பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர்.
இவரது கணவர் பெயர் சத்தியேந்திரன். தற்போது விஜயலட்சுமி ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளாா். இதனையடுத்து, நத்தம் வனச்சரக அலுவலர் பாஸ்கரன் மற்றும் சக வனப் பணியாளர்கள் விஜயலட்சுமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தனா்.