உள்ளாட்சித் தேர்தலில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் நேற்று மாலையுடன் பரப்புரை நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் மருதராஜ் உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டனர்.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம் கொம்பு, பெருமாள் மலை, மேல்மலை கிராமம், பூம்பாறை உள்ளிட்ட மலை கிராமங்களில் இந்தப் பரப்புரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "மத்திய அரசிற்கு ஜால்ரா தட்டவேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்குத் தெளிவாகத்தான் ஆதரவு அளித்துள்ளோம்.